articles

img

எங்களுக்கு ஏன் சார், இப்புடி கணேஷ்

     ஆசிரியர் நுழைந்தபோது, மாணவர்கள் மத்தியில் சிரிப் பலைகள் எழுந்து கொண்டிருந்தன. “என்ன... ஒரே குதூகலமாக இருக்குது”

    “சார்... இவன் ஒரு விளம்பரத்தப் பாத்தானாம்”

    “என்ன விளம்பரம்..?” “எங்கள மாதிரி ஒரு பையன் படிச்சுட்டு இருப்பான். அப்போ கொசு கடிக்கும். அப்பா கிட்ட சொல்வான்..”அப்பா... கொசு கடிக்குது. படிக்க முடியல”..உடனே அப்பா, “அப்புடியா... கண்ண மூடிட்டு கடவுள வேண்டிக்கோ... அவர் கொசுவ விரட்டிருவாரு”னு சொல்வார். பையனும் கண்ண மூடிக்குவான். பேப்பர் வடிவத்துல ஒரு கொசுவர்த்தி வந்துருக்குல... அதக் கொளுத்தி டேபிளுக்கு அடில வெச்சுரு வாரு... கொசுவெல்லாம் போயிரும். பையன் கண்ணத் திறந்தவுடன அப்பா சொல்வாரு... “பாத்தியா... நீ வேண்டிக்கிட்டவுடன கடவுள் கொசுவெல்லாம் விரட்டிட்டாரு”னு... பையன் கேப்பான்.. “கடவுள் டேபிளுக்கு அடில இருக்காரா”னு..”

  “செம காமெடி சார்..” “உண்மைல அந்த அப்பாவோட தலைமுறைய விட, பையன் தலைமுறைக்கு புத்திசாலித்தனம் அதிகம்” “சார்...

நம்ம சைடு” “உண்மை அதுதான்.. நானும் அத ஒத்துக்குறேன். எங்க தலைமுறைய விட, உங்க தலைமுறைக்கு புத்திசாலித்தனம் அதிகம்னு.

ஆனா எங்கிட்ட ஒரு கேள்வி இருக்கு” “என்ன சார்” “உங்க தலைமுறைக்கு இருக்கிறதா சொல்லப்படுற அந்தப் புத்திசாலித்தனம், என் முன்னாடி உக்காந்துருக்கிற உங்ககிட்ட இருக்கா.?

” கோரசாக “சார்..” “இப்பல்லாம் தேர்வுகள்ல இதச் சோதிக்க ஆரம்பிச்சுட்டாங்க..

எங்க காலத்துல  தேர்வுக்கு முன்னாடி வினாத்தாள் கைல கிடைச்சா,

ஒரே நாள்ல எல்லாத்துக்கும் விடையக் கண்டுபிடிச்சுருவோம்”

“உங்களுக்குக் கிடைச்சுருக்கா சார்” “ஆமா... எனக்கு மட்டும்தான் கிடைச்சுதுன்னு நெனச்சேன்...

ஆனா, ஊர் முழுக்க விநியோகம் பண்ணிருந்திருக்காங்க.. அன்னிக்கு காலைல செய்தித்தாள்லயே முதல் பக்கம் அச்சடிச்சுட்டாங்க”

“அப்புறம் சார்” “தேர்வே ரத்தாயிருச்சு” “எங்களுக்கும் கிடைச்சா நல்லாருக்கும்”

“அப்படி உங்களுக்குக் கிடைச்சாலும் எல்லாக் கேள்விக்கும் உங்களால விடையக் கண்டுபிடிக்க முடியாது...

இத்தனைக்கும் எங்க காலத்துல கூகுள் கிடையாது... உங்களுக்கு  இருக்கு.” “ஏன் சார்”

“எங்களுக்கெல்லாம் ஒரு வினாவுக்கு நாலு விடையக் கொடுத்து, அதுல எது சரினு கேப்பாங்க...

இப்பல்லாம் ஒரு வினாவுக்கு நாலு விடையக் கொடுத்து, அந்த விடைகள்ல எத்தனை விடை சரி, எத்தனை தப்புனு கேக்குறாங்க.. இதெல்லாம் கூகுள்ல கிடைக்காது”

“எங்கள மட்டும் ஏன் சார் இப்புடி பண்றாங்க” “உங்களுக்குப் புத்திசாலித்தனம் அதிகமாச்சே.”

“ரூம் போட்டு யோசிக்கனும் போலருக்கு” “ஜெயிச்சவங்க நல்ல உத்தியக் கடைப்பிடிச்சுருக்காங்க”

“ஒரு எடுத்துக்காட்டு சார்” “சொல்றேன்... அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி” “கேள்வி இல்லாம வகுப்பா சார்...

கேளுங்க” “உலகத்திலேயே மிகப்பெரிய பேரரசக் கட்டமைச்ச அரசர் யாரு..?” ‘அலெக்சாண்டர்’, ‘நெப்போலியன்’,

‘அசோகர்’, ‘ராஜராஜ சோழன்’, ‘ஆங்கிலேயர்’ என்றெல்லாம் விடைகள் வந்து விழுந்தன. பிதுக்கிய உதட்டை ஆசிரியர் அப்படியே வைத்திருந்ததால்,

விடைகள் நின்றன. “நீங்களே சொல்லுங்க சார்” “முன்னாடிலாம் எந்த அரசர் கிட்ட அதிகமாக் குதிரைப்படை இருக்கோ, அவர்தான் பெரிய அரசர்..  

பெரிய குதிரைப்படைய வெச்சுருந்த ஒரு அரசர், அதிக வெற்றிகளக் குவிக்கணும்னா, சேதம் குறைவா இருக்கனும்னு முடிவு பண்ணுனாரு..

அந்தக் காலத்துல குதிரைப்படை வீரர்கள்லாம் ஒரு கையால குதிரைய இயக்கிக்கிட்டு, மற்றொரு கையால வாளை வீசுவாங்க... ஈட்டி எறிவாங்க..

இவரு என்ன பண்ணுனாருன்னா, வீரர்களுக்கு குதிரையக் காலால இயக்குற உத்தியக் கத்துக் குடுத்தாரு..

அவங்கள்லாம் ரெண்டு கைலயும் வாள் வீசுனாங்க.. குதிரை மேல கம்பீரமாக உக்காந்துகிட்டு, வில்லுல அம்பப் பொருத்தி ‘சர்’னு விடுவாங்க”

“அவரு பேர நீங்க சொல்லல” “செங்கிஸ்கான்... மங்கோலிய அரசர்” “இந்தப் பேர கேள்விப்பட்டு இருக்கோம் சார்”

“வரலாறு ஆசிரியர் சொல்லியிருப்பாரு” “இல்ல சார்” என்று சொல்லி முடிப்பதற்குள் மற்றொரு மாணவர் “சார்...

சர்க்கார் படத்துல விஜய்ய செங்கிஸ்கான்னு சொல்வாங்க” “அடுத்த தடவ அந்த சீன் பாக்குறப்ப ஒரிஜனல் செங்கிஸ்கான் ஞாபகத்துக்கு வரணும்” “சார்...

இனிமே குதிரையப் பாத்தாலே செங்கிஸ்கான் ஞாபகந்தான் வரும்”